Saturday, April 27, 2024
Homeஇலங்கை செய்திகள்கதிர்காமத்தில் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

கதிர்காமத்தில் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

கதிர்காமம் பகுதியிலுள்ள சுற்றுலாத் தலமொன்றில் உள்ள நீச்சல் குளத்தில் தவறி விழுந்த சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (09-01-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இரண்டு வயது சிறுவனும் உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் சுற்றுலா விடுதியின் உரிமையாளர்களின் மகன் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று மதியம் சுற்றுலா விடுதியின் வாசலில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து, சிறுவன் காணாமல் போனான். மீட்பு குழுவினர் சிறுவனை தேடியபோது, ​​நீச்சல் குளத்தில் கிடப்பதை கண்டனர்.

நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட திஸ்ஸமஹாராம திடீர் மரண விசாரணை அதிகாரி, பெற்றோரின் கவனக்குறைவினால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments