நாட்டில் மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்று (24-11-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.எம்.ஜே.வை. பி பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாடிக்கையாளர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால், அவர் நிதித் திணைக்களத்திடம் கோரிக்கை வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.