Friday, April 26, 2024
Homeசினிமாஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா!

ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா!

விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. எப்போ தான் முடிப்பீங்க என ரசிகர்களே சலிப்புடன் கேட்கும் அளவுக்கு ஆயிரம் எபிசோடுகளை கடந்து தொடர்ந்து ஓடி கொண்டிருந்தது இந்த சீரியல்.

பாரதி தலையில் அடிபட்டு நினைவை இழப்பது போலவும் அவருக்கு நினைவு திரும்ப கண்ணம்மா பழைய நினைவுகளை தூண்டும் வகையில் நடந்துகொண்ட நிலையில் தற்போது பாரதியும் பழையபடி மாறிவிடுகிறார்.

கண்ணம்மாவை சமாதானப்படுத்த அதிகம் முயற்சித்த பாரதி அது நடக்காததால் ஒரு அதிர்ச்சி முடிவெடுக்கிறார். அமெரிக்காவில் கிடைத்து இருக்கும் வேலைக்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறிவிட்டு விடைபெற்று கிளம்புகிறார்.

கண்ணம்மா அவரது வீட்டிற்கு சென்று பழைய நினைவுகளை யோசித்து கண்ணீர் விடுகிறார். அதன் பின் தான் அவருக்கு பாரதி இன்னும் மனதில் இருப்பது புரிகிறது.

பாரதி மற்றும் குடும்பம் செல்லும் காரை பின்தொடர்ந்து செல்கிறார். அவர்கள் அதன் பின் ஒன்றும் சேர்ந்து விடுகிறார்கள்.

பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்துவிட்டதால் இன்றோடு சீரியல் முடிந்துவிடும், ‘சுபம்’ என போட்டு முடித்துவிடுவார்கள் என எல்லோரும் எதிர்பார்த்தால் அது தான் இல்லை.

மறுபடியும் ‘தொடரும்’ என்று தான் சனிக்கிழமை எபிசோடை முடித்திருக்கிறார்கள். அதனால் கிளைமாக்ஸ் அடுத்த வாரம் தான் வரப்போகிறது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments