Tuesday, March 19, 2024
Homeஇலங்கை செய்திகள்எரிபொருள் விலை தொடர்பில் வெளியானது புதிய அறிவிப்பு!

எரிபொருள் விலை தொடர்பில் வெளியானது புதிய அறிவிப்பு!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் எரிபொருள் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த எரிபொருளின் விலை அடுத்த மாத விலை சூத்திரத்திற்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெட்ரோல் விலை 100 ரூபாய் குறைக்க தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான எரிபொருள் விலை சூத்திரத்தின் ஊடாகவே எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும், மின்சாரச் சட்டம் 6 மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் வசதி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments