நாட்டை வந்தடைந்துள்ள சுப்பர் டீசல் கப்பலில் இருந்து சுப்பர் டீசல் தரையிறங்கும் பணிகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.
இந்த பதிவில் நேற்று கப்பலில் இருந்து தரையிறக்கப்படவிருந்த சுப்பர் டீசல் வங்கி நடவடிக்கை காரணமாக தரையிறக்கப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 40,000 மெட்ரிக் தொன் ஆட்டோ டீசல் கப்பல் மாத்திரமே நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 92 ஒக்டேன் பெற்றோல் கப்பலும் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளது.
இந்த கப்பலில் 33,000 மெட்ரிக் டன் பெட்ரோல் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நாட்டை வந்தடைந்த 30,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் கப்பலில் இருந்து தரையிறங்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் விநியோகம் தாமதமானதை ஈடுசெய்யும் வகையில் இரவு நேர விநியோகம் இடம்பெறும் எனவும் அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.