இலங்கையில் தடையின்றி எரிபொருளை வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
வரும் ஆண்டில் கூடுதல் எரிபொருளை கொள்முதல் செய்து சேமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் 72 ஆயிரத்து 600 மெற்றிக் தொன் டீசல் மற்றும் பெற்றோலை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு சுமார் 62 லட்சம் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக நாட்டின் நாளாந்த தேவைக்கு ஏற்ப மேலும் ஒரு தொகை மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.