Friday, April 26, 2024
Homeஇலங்கை செய்திகள்இறந்த பெண்ணின் உடலுடன் 3 நாட்கள் இருந்த குடும்பம்.. காரணத்த கேட்டு நடுங்கிய அக்கம் பக்கத்தினர்!!

இறந்த பெண்ணின் உடலுடன் 3 நாட்கள் இருந்த குடும்பம்.. காரணத்த கேட்டு நடுங்கிய அக்கம் பக்கத்தினர்!!

மதுரை எஸ்.எஸ்.காலனி கண்ணகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பெயர் மாலதி. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

தனியார் ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இரண்டு மகன்களில் மூத்தவரான ஜெய் சங்கர் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார், இரண்டாவது மகன் சிவசங்கர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.

இதனிடையே கடந்த வாரம் பாலகிருஷ்ணனின் மனைவி மாலதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மாலதியும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலதி உயிரிழந்தார்.

இதையடுத்து உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்காமல் மாலதியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளனர் குடும்பத்தினர். இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் குடியிருப்பில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வந்து விசாரித்தபோது, ​​உறவினர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக முதலில் தெரிவித்தனர். ஆனால், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலதியின் உடலை மூன்றாவது நாளாக அடக்கம் செய்யாமல் வைத்திருந்ததால், அக்கம் பக்கத்தினர் மீண்டும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதேபோல், மாலதியின் உடலை எடுத்துச் செல்லுமாறு போலீஸாரிடம் கேட்டபோதும், பாலகிருஷ்ணன் சோகமான முடிவை எடுப்பதாக மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்ததையடுத்து, மாலதியை குடும்பத்தினர் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதிக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இது தொடர்பான விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மாலதியின் இறந்த உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த பாலகிருஷ்ணனும் அவரது இரண்டு மகன்களும் அவரை உயிர்ப்பிப்பதற்காக மூன்று நாட்களாக அங்கேயே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்துக்களாக இருந்த பாலகிருஷ்ணனும் அவரது மகன்களும் சமீப காலமாக மாற்று மத பழக்க வழக்கங்களை பின்பற்றி வருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments