உலக எய்ட்ஸ் தினம் இன்று (01) டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. “சமத்துவத்தை காப்பாற்றுங்கள்” என்பது இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும்.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தேசிய மட்டத்தில் மக்களை தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் பிரச்சாரத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் ஜனக வேராகொட தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் இளைஞர் சமூகத்தினரிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிபுணர் டாக்டர் ஜானக வேரகொட தெரிவித்துள்ளார்.