Saturday, April 27, 2024
Homeஇலங்கை செய்திகள்ஆஸ்திரேலியவில் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்தியர் கைது!

ஆஸ்திரேலியவில் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்தியர் கைது!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெப்பமண்டல வடக்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் இறந்து கிடந்த இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவமானது இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய கடற்கரையில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு இற்ந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து அந்நாட்டு பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனையின் பின் வெளிவந்த அறிக்கையில் அப்பெண் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி கொள்ளப்பட்டமை தெரியவந்தது.

இந்நிலையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியர் ஒருவர் இந்ததச்சம்பவத்தை செய்துள்ளதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அத்தகவலை வழங்கிய அந்நபருக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (£563,000; $676,487) வெகுமதியாக வழங்கியுள்ளதாக பொலிஸார் தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலில் கொலை செய்தவர் இந்தியாவில் டில்லியில் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது

வெள்ளிக்கிழமையன்று இந்திய அதிகாரிகளால் டெல்லியில் கைது செய்யப்பட்ட அவர், நாடு கடத்தல் நீதிமன்ற விசாரணையை விரைவில் எதிர்கொள்வார் என்று குயின்ஸ்லாந்து போலீசார் தெரிவித்தனர்.

அதன் பிறகு அவர் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டு குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்வார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments