போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த பிறகு, 39 மர மற்றும் கேன்வாஸ் ஓவியங்கள் காணாமல் போனது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தொல்லியல் துறை அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகையின் 209 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் பாதுகாப்பிற்காக தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் குழுவொன்று அரண்மனைக்கு சென்று தற்போது அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (இரசாயன பாதுகாப்பு) திருமதி கீதானி குருப்புஆராச்சி இதனைத் தெரிவித்தார்.
சிதிலமடைந்துள்ள நிலைகளை ஆராய்ந்து, ஓவியங்களைப் பாதுகாப்பது தொடர்பான பூர்வாங்க சிபாரிசு அறிக்கை தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.