இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகயா என்ற 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் நவ.20ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து புகலிடம் கோரி அவுஸ்திரேலியா வந்த சாமி நிரந்தர பாதுகாப்பு விசாவிற்கு விண்ணப்பித்திருந்ததாகவும், அந்த விசா கிடைக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் நண்பர்கள் சுட்டிக்காட்டினர்.
சாமியின் மனைவியும் மகளும் இலங்கையில் வசிப்பதாகவும், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு அவர் கடுமையாக உழைத்ததாகவும், அவருக்கு பாதுகாப்பு விசா கிடைத்த பிறகு, அவர்களையும் ஆஸ்திரேலியாவுக்கு அழைக்க விரும்புவதாக நண்பர்கள் தெரிவித்தனர்.
குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, சாமியின் உடலை இலங்கைக்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.