தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓராண்டில் 55,000 மில்லிலிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து சாதனை படைத்துள்ளார்.
தாய்ப்பாலை குழந்தையின் முதல் உணவாக அனைவரும் கருதுகின்றனர்.
பல தாய்மார்கள் பல்வேறு காரணங்களால் போதுமான அளவு தாய்ப்பால் கொடுப்பதில்லை. மேலும் பிரசவத்தின் போது தாய் இறந்தால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை.
2014 முதல் அந்த குழந்தைகளுக்காக தாய்ப்பால் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த மோனிகா என்பவர் கடந்த ஓராண்டில் 55,000 மில்லிலிட்டர் (55 லிட்டர்) தாய்ப்பாலை வழங்கியுள்ளார். இதன் மூலம் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
கடந்த ஒரு வருடத்தில் 55,000 மில்லிலிட்டர்கள் (55 லிட்டர்) தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார்.
ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றால் அவரது பணி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிந்து மோனிகா கூறும்போது, “தாய்ப்பால் தானம் செய்யலாம் என முடிவு செய்தபோது, எனது கணவர் ஒத்துழைத்தார்.
“அமிர்தம் தாய்ப்பால் குழுமம்” மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு தாய்ப்பாலை வழங்குகிறேன். என் குழந்தை பிறந்து 100வது நாளில் இருந்து தானம் செய்கிறேன். இப்போது குழந்தைக்கு 19 மாதங்கள்.
மேலும், தாய்ப்பால் கிடைக்காமல் குழந்தைகள் இறக்கின்றனர். மேலும் தாய்ப்பாலை தானம் செய்வதன் மூலம் குழந்தை இறப்பு கணிசமாக குறைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.