13வது திருத்தச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய பொங்கல் விழா நிகழ்வில் சிறப்புரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான பிரச்சினை வடக்கு மக்களுக்கு மாத்திரமல்ல, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையிலுள்ள அனைவரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதனால் உடனடியாக முழுமையாக செயல்படுத்த முடியாது. குறிப்பாக தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய முயற்சிக்கிறேன்.
அதற்காக கட்சி தலைவர்களை சந்திக்க விரும்புகிறேன். 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.