கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பெண்கள் விடுதிக்குள் இரகசியமாக நுழைந்து உள்ளாடைகளை திருடிய ஊழியர் ஒருவர் பாதுகாப்புப் பிரிவினரால் பிடிக்கப்பட்டு மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர் மூன்று உள்ளாடைகளை வைத்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பெண்கள் தங்கும் விடுதியில் உள்ளாடைகள் காணாமல் போனது குறித்து விடுதியில் உள்ள தாதியர்கள் பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சந்தேகநபர் நேற்று (19) வழமை போன்று தங்குமிடத்திற்குள் பிரவேசித்து, உள்ளாடைகளை திருடும் போது பிடிபட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்தேக நபர் சுகாதார உதவியாளர் எனவும் அவர் களுத்துறையை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.