Wednesday, April 24, 2024
Homeஇலங்கை செய்திகள்வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஒருவரின் சடலம் மீட்பு!

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஒருவரின் சடலம் மீட்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த 1 ஆம் திகதி நாவலப்பிட்டி – கெட்டபுலா அக்கரவத்தை பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக, தேடும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் காணாமல் போனவர்களில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

மாகாவலி ஆற்றின் கம்பளை – மொரகலை பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments