Friday, April 19, 2024
Homeயாழ்ப்பாணம்வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த யாழ்.நபர் விமானத்தில் உயிரிழப்பு!

வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த யாழ்.நபர் விமானத்தில் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில், குறித்த விமானத்தில் உயிரிழந்துள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து நேற்று இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-605 என்ற விமானத்திலேயே மரணம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரத்னலிங்கம் ராமலிங்கம் என்ற 75 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், பயணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளார்.சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments