வீட்டின் கூரை ஓட்டை பிரித்து வீட்டுக்குள் இறங்கி, கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 77 வயதான மூதாட்டியை இனந்தெரியாத நபரொருவர் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் மாவனல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்ப ட்ட மூதாட்டிக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் திருமணமாகி வெவ்வேறு பிரதேசங்களில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவனெல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் கேகாலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மாவனெல்ல பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபருக்கு வலைவீசி வருகின்றனர்.