Friday, April 19, 2024
Homeஇலங்கை செய்திகள்வீசா கட்டணங்கள் அதிகரிப்பு !

வீசா கட்டணங்கள் அதிகரிப்பு !

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசா கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி, இந்த அதிகரிப்பு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பான விசேட அறிவித்தல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாகவும், 22 வயதுக்குட்பட்ட மனைவி அல்லது குழந்தைக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 500 டொலர்களாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குடியுரிமையின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான கட்டணம் ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மின்னணு பயண அங்கீகாரத்தை ஆன்லைனில் பெறுவதற்கான கட்டணம் சுற்றுலாப் பயணிகளுக்கு $50 ஆகவும் வணிகங்களுக்கு $55 ஆகவும் திருத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையர் அல்லாத துணைவியார் தங்களுடைய பிள்ளைகளுக்கு வீசா வழங்குவதற்கான கட்டணம் 150 டொலர்களாக இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments