வியாழன் கிரகத்தின் பனிக்கட்டி நிலவுகளை ஆராய்வதற்காக ஐரோப்பா தனது மிகப்பெரிய விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.
ஜூஸ் செயற்கைக்கோள் பிரான்சின் துலூஸ் நகரில் இறுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பிறகு தென் அமெரிக்காவில் உள்ள ஏவுதளத்திற்கு அனுப்பப்படும்.
ஏப்ரல் மாதத்தில் பூமியில் இருந்து தனது பயணத்தை அது தொடங்கும்.
6000 கிலோ எடையுள்ள இந்த விண்கலம், வியாழனின் நிலவுகளான காலிஸ்டோ, கேனிமீட் மற்றும் யூரோபா ஆகியவற்றில் தரையிறங்கும், அவற்றில் ஏதேனும் வாழக்கூடியதா என்று சோதிக்கப்படும்.
இது கற்பனையாகத் தோன்றலாம். வியாழனைச் சுற்றி பல நிலவுகள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து ஜோவியன் அமைப்பு என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஜோவியன் அமைப்பு சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், பூமியில் விழும் சூரிய ஒளியில் இருபத்தி ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே பெறுகிறது.