இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் உட்பட பல பிரிவினருக்கான வீசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் மூன்று இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவில் இருந்து இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியுரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள ஆவண நகல்களுக்கான கட்டணம் 1,150 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சில பிரிவினருக்கான விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.