மணியர்குளத்தில் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசன்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்வர் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மரண விசாரணை அதிகாரியின் வருகைக்காக சடலம் தற்போதும் அதே இடத்தில் காணப்படுகின்றது.