Saturday, April 20, 2024
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியா பகுதியில் எட்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!

வவுனியா பகுதியில் எட்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!

கோவில் குஞ்சுக்குள கிராமத்தில் அதிசயிக்க வைக்கும் வகையில் மாடு, கன்று ஒன்றினை ஈன்றுள்ளது.

வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில் குஞ்சுக்குளம் கிராமத்தில் அண்மையில் மாடு ஒன்று எட்டு கால்களுடன் கன்று ஒன்றினை ஈன்று மக்களை அதிசயிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த கிராமத்தில் ஆறுமுகம் ஞனேஸ்வரன் என்பவர் வருமானத்தினை ஈட்டுவதற்கு மாடுகளை வளர்த்து வருகின்றார்.

குறித்த நபர் வளர்த்து வரும் மாடு எட்டு கால்களுடன் கன்று ஒன்றினை பிரசவித்த நிலையில் குறித்த கன்று தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் இன்றைய தினம் கன்றினை பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கிராம மக்கள் சென்று அதிசய கன்று குட்டியை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதோடு குறித்த கன்று நன்றாக பால் அருந்தியும், ஓடி விளையாடியும் வருகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments