வவுனியா, தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒளிச் சமிக்ஞை கோளாறு காரணமாக தொடர்ந்து ஒளி எழுப்பி இயங்கிக் கொண்டிருப்பதால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்யும் மக்கள் புகையிரதம் வருகின்றது என்ற அச்சத்தில் பயணத்தை தொடருவதில் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இன்று காலையில் இருந்து குறித்த ஒளிச் சமிஞ்சை தன்னிச்சையாக ஒளி எழுப்பி சிவப்பு லைற் ஒளிர்ந்தபடி உள்ளது. இதனால் அப் புகையிரதக் கடவையூடாக வேலைக்குச் செல்வோர், பொதுமக்கள் எனப் பலரும் புகையிரதம் வருகின்து எனக் கருதி அவ்விடத்தில் காவல் நின்றதுடன் அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.