Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்வவுனியாவில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஏறபடுத்திய விபத்தில் முதியவர் படுகாயம்!

வவுனியாவில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஏறபடுத்திய விபத்தில் முதியவர் படுகாயம்!

வவுனியா குருமன்காடு பகுதியில் வயோதிபாறை பாதையில் செல்ல முற்பட்ட போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (30.11.2022) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து குறித்து மேலும் அறிய,

குருமன்காடு பகுதியில் இருந்து காளிகோவில் வீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வயோதிபர் மீது வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி ஊடாக பயணித்த இரண்டு அதி உயர் சிசி மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் முதியவர் காயமடைந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அதிவேகமாக பயணித்ததே விபத்துக்கு காரணம் என விபத்து நடந்த இடத்தில் திரண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் இரு மோட்டார் சைக்கிள்களையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments