வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவத்தை அடுத்து, தவறான முடிவினால் மேலும் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
2016 ஆம் ஆண்டு உயர் விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ சித்தி பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவனின் தந்தை பிரபல மருத்துவர் என்றும் கூறப்படுகிறது.
எனினும், தனது மகன் அதிக மதிப்பெண்கள் பெற்று எதிர்காலத்தில் இருதய நோய் நிபுணராக வர விரும்புவதாக மாணவனின் தாய் தெரிவித்திருந்தார்.
மேலும், உயிரிழந்த மாணவன் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தேசிய அளவில் 39வது இடத்தையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், மாணவனின் தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.