வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
தாண்டிக்குளம் பகுதியில் வீதி வளைவுக்கு அருகில் மோட்டார் சைக்கிளுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் என தெரியவந்துள்ளது.
மரணத்திற்கான காரணம் விபத்தாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தரின் பணிப்புரைக்கு அமைய பொதுமக்களின் உதவியுடன் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.