சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்துவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற விதம் அடங்கிய காணொளி ஒன்று நேற்று (25) வெளியாகியுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்ட கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பி வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வயல்வெளிக்குள் ஓடியுள்ளார்.
அப்போது, கைதியை பின்தொடர்ந்து சென்று கைது செய்யும் காட்சியை சிறை அதிகாரிகள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.