வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தை முன்னால் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து தனியார் பேரூந்தை வழி மறித்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து குறிக்கப்பட்ட நேரத்தை தவறி யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த வேளை தனியார் பேரூந்து தனக்கான நேரத்தில் யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இதன்போது திடீரென வ்வுனியா மாவட்ட புளியங்குள பகுதியில் ஏ9வீதியில் தனியார் பேரூந்தின் முன்னால் CTB அரச பேரூந்து சென்று நிறுத்தி குறித்த பேரூந்தில் இருந்து சிவில் உடையில் இருந்த சகோதர மொழியினர் தனியார் பேரூந்து சாரதியையும் நடத்துனரையும் வார்த்தை பிரயோகம் பாவித்து தாக்குதல் நடாத்த முற்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொது மக்கள் தமது கண்டனங்களை தெரிவித்தனர் இராணுவத்தினருக்கு யார் அதிகாரம் வழங்கியது பொது மக்களை தாக்குவதற்கு மற்றும் தாக்க முற்பட்டவர்களுக்கு உரிய தண்டணை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுகொண்டுள்ளனர்.