வவுனியாவில் இருசக்கர வாகனம் மீது அரச பேருந்து மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் இன்று 15 வவுனியா, வைத்தியசாலை வட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணியளவில் மன்னார் நோக்கி புறப்பட்ட அரச பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டம் வழியாக குடியிருப்புக்கு சென்று கொண்டிருந்த போது வைத்தியசாலை வீதியில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் வவுனியா, வாக்ககுளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா தவராசா (வயது 65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தின் பின்னர் இ.பி.சபை சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.