Tuesday, April 16, 2024
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!

வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!

மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இன்று காலை வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த பேரணி பஸார் வீதி ஊடாக பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்த பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments