Thursday, April 25, 2024
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியாவில் அதிக விலைக்கு எரிபொருள் விற்ற எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கைது!

வவுனியாவில் அதிக விலைக்கு எரிபொருள் விற்ற எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கைது!

வவுனியாவில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்ததாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையிலுள்ள வவுனியா தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றும் எரிபொருள் நிரப்பும் ஊழியர் ஒருவர் அங்கு கொல்கலனில் எரிபொருளை சேமித்து அருகேயுள்ள வியாபார நிலையத்தில் வைத்து ஒரு லீற்றர் பெற்றோல் 1000 ரூபா வீதம் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து 16 லீற்றர் பெற்றோல் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments