Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்வருகின்ற நவம்பர் மாதம் முக்கிய நாட்டிற்கு பறக்கும் ஜனாதிபதி ரணில்!

வருகின்ற நவம்பர் மாதம் முக்கிய நாட்டிற்கு பறக்கும் ஜனாதிபதி ரணில்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ள COP 27 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்பு முக்கியமானது என ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.

சிஓபி 27 மாநாட்டில் பங்கேற்க மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் தீர்மானித்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகராக நோர்வேயின் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை அண்மையில் ஜனாதிபதி நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments