Tuesday, April 23, 2024
Homeஇலங்கை செய்திகள்வங்கக் கடலில் நிகழவுள்ள மாற்றம் - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிகழவுள்ள மாற்றம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் படிப்படியாக வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments