தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் நடைபெற்ற போரில் உயிர்நீத்த மாவீரர்களை இன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் வேதனையுடன் நினைவு கூர்கின்றனர்.
தாய்நாடு முழுவதும், மாவீரர்களை, சிவப்பு-மஞ்சள் கொடிகளுடன் தாயக மக்கள் நினைவு கூர்கின்றனர்.
இந்நிலையில், லண்டன் ஒக்ஸ்போர்ட் வரலாற்று மையத்தில் தாய்நாட்டின் விடுதலைக்காக பெரும் தியாகங்களைச் செய்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.