Thursday, April 25, 2024
Homeஇந்திய செய்திகள்ரூ.1 லட்சம் பரிசு... சிறந்த திருநங்கை விருது - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

ரூ.1 லட்சம் பரிசு… சிறந்த திருநங்கை விருது – விழுப்புரம் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சிறந்த திருநங்கைக்கான விருது குறித்து விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பை வெளிட்டுள்ளார். அதில், விழுப்புரத்தில் உள்ள திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2022-2023ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்ட திருநங்கையாக இருத்தல் வேண்டும். திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப்பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிப்பவர் தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. மேலும் இவ்விருது பெற விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள்,

விருது பெற தகுதியுள்ளவர் இதற்கென தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவர் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments