காலி மற்றும் ஹபரதுவையில் இன்று முச்சக்கர வண்டியும் புகையிரதமும் மோதியதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹபராதுவ, தலவெல்ல, மஹரம்ப புகையிரத கடவைக்கு அருகில் இன்று காலை உயிரிழந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த ரஷ்ய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
புகையிரத கடவையில் உள்ள புகையிரத கதவுகள் செயற்படாதமை தொடர்பில் வாகன சாரதிகளுக்கு அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.