ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் மகள் ஆதரவற்ற நிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் நான்கு வயது மகளுக்கு பொறுப்பேற்க யாரும் இல்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
முச்சக்கரவண்டி விபத்தில் உயிரிழந்த ரஷ்ய பெண் உனவடுன பிரதேசத்தில் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
தனது மகளை குழந்தை பராமரிப்பு நிலையத்தில் விட்டுச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுமிக்கு இலங்கையில் உறவினர்கள் எவரும் இல்லாததால், ரஷ்ய தூதரகத்தின் ஊடாக உறவினர்கள் அவளை தொடர்பு கொள்ளும் வரை சிறுமி நியமிக்கப்பட்ட குழந்தை பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்படுவார்.