Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்ரணில் அதிரடி உத்தரவு! - வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்க -...

ரணில் அதிரடி உத்தரவு! – வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்க – ரணில் அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிராந்தியத்தில் 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் ரணில் தலைமையில் நடைபெற்றது.

இதேவேளை வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணியின் பல்வேறு பகுதிகளில் உள்ள 108 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பலாலி வீதி கிழக்கில் உள்ள விவசாய நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

பலாலி விமான நிலையத்தை அண்மித்த அந்த பகுதியில் கட்டிடங்கள் கட்டக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பலாலி வீதி கிழக்கில் உள்ள விவசாய நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

பலாலி விமான நிலையத்தை அண்மித்த அந்த பகுதியில் கட்டிடங்கள் கட்டக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments