Wednesday, April 24, 2024
Homeசினிமாயோகிபாபுவை அடித்ததாக கூறிய திரைப்பட இயக்குனர் ..பரபரப்பில் கோலிவுட் வட்டாரம்

யோகிபாபுவை அடித்ததாக கூறிய திரைப்பட இயக்குனர் ..பரபரப்பில் கோலிவுட் வட்டாரம்

டப்பிங் தியேட்டரில் யோகிபாபுவை அடித்தேன் என தாதா பட இயக்குனற்ற கூறியுள்ளது தற்போதும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேச பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு தற்போது முன்னணி நடிகர்களான ரஜினி விஜய் உள்ளிட்டோருடன் நடிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளார்.

துரங்கவேட்டை 2, பூச்சாண்டி, சலூன், அயலான், சுந்தரா டிராவல்ஸ் 2, தலைநகரம் 2, வாரிசு, ஜெயிலர், மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள் என ஏராளமான படங்கலில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகர் யோகி பாபு நடிகர் யோகி பாபு தாதா திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் தான் ஹீரோ இல்லை என்றும், நான்கே நான்கு சீனில் மட்டும் தான், நான் நடித்துள்ளேன் என்றும், அந்த இயக்குனர் என்னுடைய புகைப்படத்தை போட்டு ஏன் இப்படி செய்தார்? என்று எனக்கு தெரியவில்லை என்று யோகிபாபு கூறி இருக்கிறார்.

இந்நிலையில், தாதா திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வடப்பழனியில் நடைபெற்றது. இதில் பேசிய தாதா திரைப்பட இயக்குநர் கிஷோர். தாதா திரைப்படத்தில் நடிக்கவில்லை என, யோகி பாபு ட்வீட் செய்தாலும், அது குறித்து எந்தவிதமான கவலையும் எனக்கு இல்லை என்றார். தாதா திரைப்படத்தை எந்த தயாரிப்பாளர்களும் வாங்க விடாமல் யோகி பாபு தடுத்ததாகவும், அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் இயக்குநர் கிஷோர் தெரிவித்தார்.

யோகிபாபுவை அடித்தேன்

தொடர்ந்து பேசிய கிஷோர், யோகி பாபு தாதா படத்தில் நடித்திருக்கிறார். டப்பிங் பேச வராததால் எங்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவரை அடித்ததால் பயந்து போய் இந்த படத்துக்கு வந்து டப்பிங் பேசி கொடுத்தார். அதை மனதில் வைத்துக்கொண்டு தான் அவர் இந்த மாதிரி பொய்களை கூறி வருகிறார் என்றார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments