யாழ். மருதங்கேணி, மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (30.01.2023) பதிவாகியுள்ளது.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நீராடச் சென்ற மூவரில் ஒரு சிறுவர் மட்டுமே காணாமல் போயுள்ள நிலையில் மற்றொரு சிறுவர் நீரில் மூழ்கிய நிலையில், மீட்கப்பட்டு பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன சிறுவனை பொலிஸார், கடற்படையினர், மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.