Tuesday, April 23, 2024
Homeயாழ்ப்பாணம்யாழ். மக்களுக்கு ஆபத்து! மீண்டும் முகக்கசம் அணியக்கூடும் என எச்சரிக்கை!

யாழ். மக்களுக்கு ஆபத்து! மீண்டும் முகக்கசம் அணியக்கூடும் என எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

இன்று காலை 11.50 மணி நிலவரப்படி, கொழும்பு, பட்டர்முல்ல பகுதிக்கு ஊதா நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.

இதேவேளை, மன்னார், வவுனியா, தம்புள்ளை மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், புத்தளம், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

எனினும், களுத்துறை, எம்பெல்லிப்பிட்டி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நல்ல காற்றின் தரம் பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments