Friday, March 29, 2024
Homeயாழ்ப்பாணம்யாழ் பல்கலைக் கழக மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டும் இளைஞர்கள் - 300 மாணவிகள் செய்த...

யாழ் பல்கலைக் கழக மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டும் இளைஞர்கள் – 300 மாணவிகள் செய்த செயல் !

யாழ்.பல்கலைக்கழகத்தின் கொக்குவிலில் உள்ள மகளிர் விடுதி மற்றும் வாடகை அறைகளில் தங்கியிருக்கும் மாணவிகள் காலையிலும் மாலையிலும் வீதியூடாக பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது சில ஆசாமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 300 மாணவிகளின் கையெழுத்துடன் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் பின் வீதியூடாக விடுதிக்கு சென்று கொண்டிருந்த மாணவிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பகுதியில் உள்ள வாடகை விடுதிக்கும் சென்று அவர்களின் அந்தரங்க உறுப்பை காட்டி மிக மோசமான அநாகரீகமான வார்த்தைகளை கோஷமிட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்துடன் தொடர்பு படாத இளைஞர்களை இவ்வாறான செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மாணவிகள் இருவரையும் அழைத்து ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மோட்டார் சைக்கிளின் இலக்கத்துடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments