Saturday, April 20, 2024
Homeயாழ்ப்பாணம்யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத்தலைவராக பெண் நியமனம்!

யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத்தலைவராக பெண் நியமனம்!

யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நியமனம் இன்றைய தினம் சனிக்கிழமை (25-03-2023) கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக பொறுப்பேற்ற நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் பதில் துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments