யாழ். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ். தேவி விரைவு தொடருந்து தடம் புரண்டு விபத்துக்கு இலக்காகியுள்ளது.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிற்கும் மதவாச்சிக்கும் இடையில் யாழ். தேவி வேகமாக தடம் புரண்டுள்ளது
புகையிரதத்தின் இயந்திரம் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதன் காரணமாக வடக்கு நோக்கிச் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.