Thursday, April 18, 2024
Homeயாழ்ப்பாணம்யாழ் சிறுவர் இல்லத்தில் பாலியல் துன்புறுத்தல்!

யாழ் சிறுவர் இல்லத்தில் பாலியல் துன்புறுத்தல்!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவன் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிறுவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இல்லத்தில் காப்பாளராகப் பணியாற்றும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் மன்னாரைச் சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார் விசாரணைகளின் பின் சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments