சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காரைநகர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தை நேற்று காலை திடீர் சுகவீனம் காரணமாக காரைநகர் வளந்தல் வைத்தியசாலையில் பெற்றோரால் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அங்கு குழந்தை உயிரிழந்துள்ளது.