யாழ்.மாநகரசபையிடம் நகர அபிருத்தி அதிகாரசபையினால் கையளிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து தரிப்பிடம் நீண்டகால இழுபறிக்குப் பின்னர் நேற்று இரவு தொடக்கம் இயங்க ஆரம்பித்திருக்கின்றது.
யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் முயற்சியில் யாழ் – கொழும்பு தனியார் பஸ்கள் தற்போது குறித்த பஸ் தரிப்பிடத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக பரீட்சார்த்தமாக பஸ் சேவை நடத்தப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு புதிய பஸ் நிலையம் பழைய பண்ணையில் இருந்த பஸ் நிலையத்தை விட அதிக வசதிகள் கிடைப்பதாகவும்
குறிப்பாக மலசலகூட வசதிகள் மற்றும் மழை நேரத்தில் ஒதுங்கி இருப்பதற்கு வசதிகள் இருப்பதாகவும் மகிழ்வுடன் தெரிவித்தனர்.
பஸ் உரிமையாளர்கள் தாம் தொடர்ந்தும் குறித்த புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயங்குவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.