Thursday, April 18, 2024
Homeயாழ்ப்பாணம்யாழ்ப்பாணத்தில் நடு வீட்டுக்குள் சிக்கிய மர்ம பொருள்!

யாழ்ப்பாணத்தில் நடு வீட்டுக்குள் சிக்கிய மர்ம பொருள்!

யாழ். ஊர்காவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் – நெடுங்காடு பகுதியில் இறைச்சிக்காக மாட்டை அறுத்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் இன்று (07-12-2022) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவத்துறை பொலிஸ் நிலையத்தின் மேற்பார்வையில் காரைநகர் பொலிஸ் அரண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது இருவர் தப்பிச் சென்ற நிலையில் வீட்டின் உரிமையாளர் மாட்டிறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை உள்ளூர் பொலிஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments