யாழ்ப்பாணம் செம்மணி நுழைவு வாயிலுக்கு அருகில் நேற்று மாலை சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் 7 அடி உயர கருங்கல்லால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில், விரைவில் சிவலிங்கம் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிவபூமி அறக்கட்டளை சில வருடங்களுக்கு முன்னர் நவக்குழியில் சிவபூமி அறக்கட்டளையால் சிவபூமி திருவாசக அரண்மனை மற்றும் யாழ்ப்பாண வரலாற்றை கூறும் கலைப்பொருட்கள் அருங்காட்சியகமான ‘சிவபூமி அருங்காட்சியகம்’ என்பனவற்றை திறந்து வைத்து அதனை நினைவு கூறும் செயற்பாடுகளை சிவபூமி அறக்கட்டளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. சிலை வைத்து இந்து மதத்தை மேலோங்க வைத்த பெரியார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் நுழைவு வாயிலில் 7 அடி உயர கருங்கல்லால் சிவலிங்கம் நிறுவப்பட்டமை தொடர்பில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.