Saturday, April 20, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் 49 வயதான கனடா தமிழரையும் 43 வயதான ஆசிரியையும் தாக்கிய அயலவர்கள் :...

யாழில் 49 வயதான கனடா தமிழரையும் 43 வயதான ஆசிரியையும் தாக்கிய அயலவர்கள் : வெளியான காரணம்!

யாழ் வலிகாம்ம் பகுதியில் 43 வயதான ஆசிரியையும் 49 வயதான கனடா புலம்பெயர் தமிழரும் அயலவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.

இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது. கணவனை பிரிந்துவாழும் குறித்த ஆசிரியை நடத்தை பிழையானவர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனாலேயே கணவர் அதனது 15 வயது மகனையும் கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு கடந்தவருடம் வெளியேறியுள்ளார் .

இந் நிலையில் கனடாவில் இருந்து வந்த ஒருவர் ஆசிரியையுடன் இரவு தங்கியிருந்த போது அயல்பகுதியை சேர்ந்தவர்களால் வீடு சுற்றி வளைக்கப்பட்டு இருவர்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணைக்காக வீட்டுக்குச் சென்ற பொலிசார் கனடா நபரின் பாஸ்போட் மற்றும் பணம், ஆவணங்களை மீட்டுள்ளார்கள். அதே நேரம் வீட்டின் ஹோல் பகுதியில் பெருமளவு பொரித்த இறால்கள் மற்றும் பியர் போத்தல்கள் சிதறிகாணப்பட்டதாக பொலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments